1

1 அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
2 (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
3 (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
4 (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
5 நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
6 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
7 (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.